வளர்ப்பு தந்தையால் சிறுமி பாலியல் துன்புறுத்தல்

வளர்ப்பு தந்தையால் பாலியியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக 12 வயது சிறுமி  புகார் வழங்கியதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட தலைவர் ஏசிபி நிக் ஏசானி தெரிவித்தார்.  அப்புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சிறுமி 7 வயது முதல் 36 வயதுடைய அந்நபரால் பாலியியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. அச்சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்த ஆடவர் வெளிநாட்டவரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சிறுமியை பரிசோதனைக்காக அச்சிறுமியை மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சமூக நல இலாகாவினரும் அச்சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதை உறுதிப்படுத்தினர்.

அவ்வாடவரை மேற்விசாரணைக்காக 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது செக்‌ஷன் 14/a வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறைத்தண்டனையும் பிரம்படியும் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here