விலாயா மாநில கிம்மாவின் மனிதநேய உதவி

விலாயா மாநில கிம்மா  உறுப்பினர்கள் மாநிலத் தலைவரும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான  அஸ்ரப் அவர்களுடன் இணைந்து கோம்பாக் வட்டாரத்தில் தனித்து வாழ்பவர்களுக்கு உதவி பொருட்களை வழங்கியதோடு அவர்களின் வீட்டையும் சுத்தம் செய்து தந்திருக்கின்றனர்.

மேலும் சமூக இலாகா வழி எந்த மாதிரியான உதவிகளை பெற்று தர முடியும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாக  அஸ்ரப் கூறினார். தற்பொழுதைய கோவிட்-19 காலகட்டத்தில் பலர் வேலை இழந்து வரும் வேளையில் இது போன்ற தனித்து வாழுபவர்களுக்கு உதவிகளை வழங்குவது மிகவும்  மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here