மன்னிப்பு அனைத்து பிரச்சினைகளும் மருந்தாகாது

பெட்டாலிங் ஜெயா: போலீஸ் மற்றும் ஆயுதப்படைகள் குறித்து உணர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்த பின்னர் டத்தோ மொஹமதீன்  கெட்டாபி கோரியிருக்கும் மன்னிப்பினை ஏற்று கொள்ள முடியாது என்று இஸ்மாயில் சப்ரி கூறுகிறார்.

தற்காப்பு அமைச்சர்  டத்தோ ஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், மலேசிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக உணர்ச்சிக்கரமான கருத்துக்களை தெரிவித்ததற்காக வாரிசன் தலைவர் மன்னிப்பு கோரியிருந்தாலும், லஹாட் டத்துவில் ஏழு கம்போங் டாண்டுவோ ஊடுருவலின் போது நாட்டைப் பாதுகாத்து 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவர்களை  அது மீண்டும் உயிர்ப்பிக்காது.

“யாரும் இறந்ததாக பாசாங்கு செய்யவில்லை. இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் உணர்திறன் பற்றி சிந்திக்காமல் அரசியல்வாதி இதுபோன்ற  அறிக்கையை வெளியிட்டார்.

“குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவிகள் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் ஆகியோரின் உணர்திறன் பற்றி சிந்தியுங்கள். எஞ்சியுள்ளவற்றைப் பெற்றபோது இறந்தவர்களின் குடும்பத்தின் உணர்வினை புரிந்து கொள்ளுங்கள்என்று அவர் கூறினார்.

ஊடுருவல் ஒரு அரங்க நாடகம் என்றும், போலீஸ் மற்றும் ஆயுதப்படைகள் கோழிகளுக்கும் நாய்களுக்கும் எதிரான போரில் மட்டுமே ஈடுபட்டுள்ளன என்றும் கூறி மொஹமதீன் கூறியிருந்தார்.

மொஹமதீன் மன்னிப்பு கோரியதுடன், தனது கருத்துக்கள் சூழலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறினார். இது குறித்து பலர் போலீஸ் புகாரினை பதிவு செய்துள்ளனர்ன்று்  இஸ்மாயில் சப்ரி கூறினார்.

தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களைக் குறைகூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here