பெற்றோர் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல் இவர் மனைவி கவிதா. வடிவேல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் மனைவி கவிதா தனியார் வங்கியில் வேலை செய்கிறார்.இவர்களது மகன் பிரைட் ஷாம்(14) அங்குள்ள பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா காரணமாக சிறுவன் மட்டும் வீட்டில் இருந்தான்.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரைட் சாம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, நண்பனை தேடி வந்த பிரைட் சாமின் நண்பர்கள் அவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதன்பின்னர், குன்றத்தூர் போலீசார் பிரைட் சாமின் நண்பர்களிடத்தில் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த டி.வி யை சிறுவன் சானிடைசர் கொண்டு துடைத்துள்ளான்.

அப்போது, டி.வி பழுதடைந்து உடைந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. இதனால், பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் பிரைட் சாம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here