கூச்சிங்: சரவாக் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் டத்தோ ஹாஜிஜி முகமட் நூரின் கீழ் புதிய சபா அரசாங்கம் சிறப்பாக செயல்பட முடியும் என்று டத்தோ அமர் டக்ளஸ் உகா தெரிவித்துள்ளார்.
சரவாக் அரசாங்கம் தேசத்தின் நலனுக்காக இருக்கும் வரை யாருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக துணை முதல்வர் கூறினார். நாங்கள் எப்போதும் மலேசியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை விரும்புகிறோம்.
இதனால்தான் நாங்கள் டான் ஸ்ரீ முஹிடினை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஏனெனில் எந்தவொரு உறுதியற்ற தன்மையும் நாட்டிற்கு நல்லதல்ல என்று அவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) கூறினார்.
சபா பெர்சத்து தலைவரான ஹாஜிஜி சபாவின் 16 ஆவது முதல்வராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். துணை முதலமைச்சரான டான் ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங், ஜிபிஎஸ் மத்திய அரசாங்கத்துடன் நன்மை பயக்கும் மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை வலுப்படுத்த ஹாஜிஜியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறார் என்றார்.
ஹஜிஜி நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், புதிய முதலமைச்சர் சபாவுக்கும் சரவாகுக்கும் இடையிலான நல்ல உறவை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சபாவை நிர்வகிப்பதில் அவருக்கு உதவ அவர் நியமிக்கும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனுபவம், நேர்மை மற்றும் திறமை வாய்ந்த நபர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று மாசிங் மேலும் கூறினார்.