10 வருடமாக பணியாற்றிய ஊழியருக்கு கார் பரிசளித்த ஜோகூர் நகைக்கடை

ஜோகூர் பாரு:

டந்த பத்தாண்டுகளாக நேர்மையாகப் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு ஜோகூரில் செயல்படும் நகைக்கடை புத்தம் புதிய காரைப் பரிசாக அளித்து, அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது.

அந்த ஊழியரின் ‘இடைவிடா முயற்சிகளையும் குறிப்பிடும்படியான பங்களிப்புகளையும்’ அங்கீகரிக்கும் விதமாக இந்தக் காரை பரிசளித்ததாக ‘Tiansi Jewellery (தியான்சி ஜுவெல்லரி)’ தெரிவித்துள்ளது.

அந்த Proton X50- ‘SUV ’ காரின் விலை 113,000 ரிங்கிட் என புரோத்தோன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

இந்நிலையில் “மதிப்புமிக்க ஊழியருக்கு, ஊக்கமளிக்கும் மற்றும் அவரது திறமையை ஒரு அங்கீகரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறோம் எனும்படியான வேலைச்சூழலை உருவாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என Tiansi Jewellery ஒரு வாரத்திற்கு முன்பு LinkedIn சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.

ஜோகூரில் அந்நிறுவனத்திற்கு நான்கு நகைக்கடைகள் உள்ளன.

மேலும் கார் பரிசு பெற்ற நி ஆய் நி என்ற அந்தப் பெண் ஊழியர், தனக்குக் கார் பரிசு கிடைத்தது குறித்து சமூக ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஊழியர்களிடம் சொன்னபடி நடந்துகொள்ளும் முதலாளியைக் கொண்டுள்ள நல்லதொரு நிறுவனத்தில் வேலைசெய்ய தான் கொடுத்துவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here