இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால் நீச்சல் வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நீச்சல் குளங்களை வருகிற 15-ந் தேதி முதல் மீண்டும் திறந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் நீச்சல் வீரர், வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.