போதைப் பொருள் வைத்திருந்த இளைஞர் கைது

பெஸ்ராயா நெடுஞ்சாலையில் இருந்து செராஸ் சென்று கொண்டிருந்த மைவி ரக காரை ஓட்டி சென்ற  சந்தேகத்திற்குரிய  ஓர் இந்திய ஆடவரை தடுத்தி நிறுத்திய செராஸ் போலீசார் அவரின் காரில் இருந்து 118 கிராம் எடை கொண்ட 65 பாக்கெட் மெத்தா கெத்தமின், 3.30 கிராம் ஹெரோயின், 3.77 கிராம் கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

23 வயது வேலை இல்லாத அந்த இளைஞர் மீது ஏற்கெனவே 2 குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 5,650 வெள்ளி என செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது மோக்சின் பின் முகமது சோன் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞனை பரிசோதத்தில் அவர் THC என்ற போதைப் பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நபர் 7 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதோடு செக்‌ஷன் 39(b) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

படங்கள்: எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here