சபாவில் 122 பள்ளிகள் மூடல்

சபாவில் உள்ள கோத்தா கினபாலு, பெனாம்பாங்  புட்டாடன் பகுதிகளில் மொத்தம் 122 பள்ளிகள் நாளை இன்று முதல் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இப்பகுதியில் உள்ள 122 பள்ளிகள் ஒரு நாள் முன்னதாக (அக். 6) மூடப்படும் என்று  கல்வித்துறைமுடிவு செய்தது.

பள்ளிகளில் உள்ளவர்களின் உடல்நலம் பாதுகாப்பை கவனித்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் நிலைமையை எப்போதும் கண்காணிப்பதோடு, தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) சுகாதார அமைச்சகத்துடன் ஒத்துழைப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூத்த அமைச்சரான (பாதுகாப்பு) டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், சி.எம்.சி.ஓவின் அமலாக்கம் மூன்று பகுதிகளிலும் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதுடன், இலக்கு வைக்கப்பட்ட செயலில் உள்ள வழக்கு கண்டறிதலை மேற்கொள்ளவும்  உதவும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here