லடாக்கில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அதேபோல்,சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here