இந்திய ஊடகங்கள் தைவானை தனி நாடாக கூறி வருகின்றன. நாளை தைவான் தேசிய தினம் கொண்டாடப்படுவது குறித்த விளம்பர நிகழ்ச்சி தனியார் ‘டிவி’ ஒன்றில் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது.இதையடுத்து டில்லியில் உள்ள சீன துாதரகம் ‘தைவான் சீனாவுக்குச் சொந்தமானது என்பதால் அதை தனி நாடாக சித்தரிக்க வேண்டாம். உலகில் ஒரே சீனா தான் உள்ளது’ என அனைத்து ஊடகங்களுக்கும் அறிக்கை அனுப்பியது.
இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:இந்தியாவில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன. எந்த பிரச்னையை சொல்ல வேண்டும் என தோன்றுகிறதோ அதை சொல்ல ஊடகங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அறிவுரை வழங்கத் தேவையில்லை, என்றார்.