செராஸ் கொலை சம்பவத்தில் ஆடவர் கைது

கோலாலம்பூர்: செராஸில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டின் கடைக்கு முன்னால் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 41 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் நடந்த இடத்திற்கு அருகே வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செராஸ் ஒ.சி.பி.டி உதவி ஆணையர் முகமட் மொக்ஜைன் முகமது  தெரிவித்தார்.

லோரி ஓட்டுநரான சந்தேக நபர், திருட்டு மற்றும் கிரிமினல் மிரட்டல் சம்பந்தப்பட்ட குற்றவியல் பதிவுகளில் இரண்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஏழு குற்றங்கள் உள்ளன.

கொலையின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம் என்று அவர் வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டபோது கூறினார்.

சந்தேக நபர் அக்., 15 வரை தடுப்பும் காவலில்  வைக்கப்படுவார். செராஸில் ஒரு அடுக்கு மாடி வீட்டின் அருகே வியாழக்கிழமை ஒரு கடையின் முன் 52 வயது நபர் கொலை செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கடையின்  முன் அவர் தலை குப்புற விழுந்து கிடந்ததாகவும் அந்நபர்  குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. சம்பவத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர் மற்றொரு மனிதருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சாட்சிகள் கூறினர்.

சந்தேகநபர் விரைவில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று ஏசிபி மொஹமட் மொக்ஸைன் கூறினார். தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு உதவ மற்ற சாட்சிகளை நாங்கள் அழைப்போம்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here