வாகன விபத்தில் சிக்கிய 5 பேரை காப்பாற்றிய வழிப்போக்கர்கள்

குவாங்: இங்குள்ள கம்போங் எம்.ஐ.சி, ஜாலான் பத்து பகாட் – குளுவாங்கில் நடந்த கார் விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. மேலும் கார்களில் ஒன்று தீப்பிடித்தபோது 90% எரிந்து விட்டது என்று குவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை  தலைவர்  ஜைடி  துமிரான் தெரிவித்தார்.

தீப்பிழம்புகளை வெளியேற்றுவதற்காக தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், எரியும் காரில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட நான்கு பாதிக்கப்பட்டவர்களையும் வழிப்போக்கர்கள்  காப்பாற்ற உதவியதாக அவர் கூறினார்.

மற்ற வாகனத்தில் இருந்த ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக குவாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.

11 தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அரை மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here