கோவிட் -19 ஆர்.டி அல்லது ஆர்-நாட் (ஆர் 0) தொற்று விகிதம் 2.2 ஐ எட்டாமல் இருக்க சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) கடுமையாகச் செயல்பட்டு வருகிறது, ஏனெனில் சுகாதார வசதிகள் நோயாளிகளின் எண்ணிக்கையை அடைந்தால் அதற்கு இடமளிக்க முடியாது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார்.
எனவே இந்த துறையில் உள்ள அனைத்து பொது சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும், அக்டோபர் 31 க்குள் 0.3 ஆக குறைக்க முடியும். மேலும் வளைவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
ஆனால் தொற்று இப்போது 1.3 ஆக இருந்தால், அக்டோபர் 31 வரை வழக்குகளின் எண்ணிக்கையில் மெதுவான அதிகரிப்பு இருப்பதை காணலாம். நாங்கள் இதை தவிர்க்க முயற்சிக்கிறோம்.
தொற்றின் பாதிப்புய் அதிகரிக்குமானால் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அதிக நோயாளிகளுக்கு இடமளிக்க முடியாது என்று அவர் நேற்று MOH இன் பேஸ்புக்கில் ஒளிபரப்பிய தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார்.
தனிமைப்படுத்தல், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சிகிச்சை உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளை அமைச்சகம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் .
இது தவிர, எல்லைக் கட்டுப்பாடு, மாவட்டக் கட்டுப்பாடு, நெருங்கிய தொடர்புத் தடமறிதல், நேர்மறையான நிகழ்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றைத் தீவிரப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மூலம் தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, டாக்டர் நூர் ஹிஷாம் இன்று 561 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதை அறிவித்தார், நேற்றைய தினத்தில் 374 வழக்குகளில் இருந்து மேலும் இரண்டு உயிரிழப்புகள் உள்ளன என்றார்.
இது தவிர, ஐந்து புதிய தொற்றுத்திரள் அடையாளம் காணப்பட்டன, அதாவது, சபாவில் மூன்று, மத்திய பிராந்தியமான லாபுவான், சிலாங்கூரில் ஒவ்வொன்று என அவர் கூறினார்.