சாலை தடுப்பில் நிற்காமல் சென்ற ஜோடி கைது

பத்து 15 மைலில் போலீசாரின் சாலை தடுப்பில் நிற்காமல் சென்ற ஹோண்டா பெரியோ காரில் இருந்த மலாய் ஜோடியால் பணியில் இருந்த ஒரு போலீஸ்காரருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவரை போலீசார் ஜாலான் துன் தேஜா, ரவாங் பட்டணம், சுங்கை சோ, தாமான் புக்கிட் ரவாங் ஜெயாவில் நுழைந்தவுடன் அவ்விடத்தில் இருந்த ஜாலான் 2/29 என்ற இடத்தில் சாலை சந்திப்பு இல்லாததால் (ஜாலான் மத்தி) போலீசார் கைது செய்தனர்.

34வயதான அந்த ஆடவர் மீது போதைப் பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் இருப்பதோடு 29 வயது பெண்மணி மீது 2 குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அவர்களிடம் இருந்து 4 பாக்கெட் ஷாபு வகை போதைப் பொருள் மற்றும் 2 அட்டை ஹெராமின் 5 என்ற மாத்திரை இருந்ததோடு கடந்த 7 ஆண்டுகளாக இவர் போதைப் பொருள் விநியோகத்தில் இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

செக்‌ஷன் 39B, 15/1 ADB கீழ் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் இருவரும் 6 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவர் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

இருவர் மீதும் நடத்தப்பட்ட சோதனையில் அந்த ஆடவர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது உறுதியாகி இருக்கும் வேளையில் அந்த பெண் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here