நடிகை விஜயலட்சுமி மீது புகார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து, தொடர்ந்து பேசி வந்த நடிகை விஜயலட்சுமி, குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை தரவில்லை என, வீட்டு உரிமையாளர், போலீசில் புகார் அளித்து உள்ளார்.பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர், நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

குறிப்பாக, தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றிவிட்டதாக கூறினார். இதனால், சீமான் ஆதரவாளர்கள், இவரை கடுமையான விமர்சித்து, வசை பாடினர். அவர்களுக்கு, விஜயலட்சுமி, தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.விஜயலட்சுமி, சில மாதங்களாக, சென்னை, திருவான்மியூரில் உள்ள, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கிறார். ஆனால், வாடகை தரவில்லை என, வீட்டு உரிமையாளர் சமீர், நேற்று, திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.அதில், குடியேறிய நாள் முதல், வாடகை தரவில்லை என்றும், லட்சம் ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, போலீசார், நடிகை விஜயலட்சுமியிடம் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here