அமெரிக்காவில் தேர்தல் நாளில், பார் ஒன்றில் நடந்த கலவரத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
அந்த மூன்று பேரில் பிரபல ராப் பாடகர் கிங் வானும் ஒருவர். இது சம்மந்தமாக தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு குழுவுக்குள் நடந்த மோதலில் இந்த உயிர்பலிகள் நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. தேர்தல் நடந்த நாளில் இப்படி ஒரு அசம்பாவத சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.