இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொன்ற நர்சு கைது

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30). இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15 பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு நர்சு லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக போலீசார் நர்சு லூசியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here