தளபதி 65 அப்டேட் – மெர்சல் வில்லனிடம் கதை கேட்ட விஜய்

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக அவரின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகி விட்டார்.
இதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, மோகன் ராஜா, ஹரி உள்ளிட்டோர் உள்ளனர். பேரரசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமான நெல்சன் சொன்ன கதையும் விஜய்யை கவர்ந்ததாக பேசினர்.
இந்த நிலையில் புதிதாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் 2000-ஆம் ஆண்டு வெளியான குஷி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் நண்பன், மெர்சல் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை காதல், திகில், அதிரடி அம்சங்களுடன் இருந்ததாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதில் விஜய் நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here