அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976- ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.
இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா இன்று அதிகாலை விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது. நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகள்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், அமெரிக்கா ரஷியாவிற்குப் பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3- ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுவிடும்.