பெல்மோபன்:
கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு வயது 60. அவர் அடுத்த 2 வாரங்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள போகிறார். அதன்பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது.
அந்த நாட்டில் இதுவரை 5ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 116 பேர் பலியாகி உள்ளனர்.