குடிபோதையில் வாகனத்தால் மரணம் விளைவித்தார்!

 

காஜாங்-

காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலையில் (லேகாஸ்) குடிபோதையில் வாகனம் ஓட்டியதோடு, தொழிற்சாலைப் பணியளரின் மரணத்திற்கு காரணமான குற்றச்சாட்டில் ஒரு விற்பனையாளர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஹோய் யூ செங், 41, அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் மாஜிஸ்திரேட் சியாருல் சாஸ்லி மொஹ்மட் வாசித்தார்.

குற்றச்சாட்டின் படி, ஹோய் மது போதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது, இதனால் ஒரு தொழிற்சாலை ஊழியரான மோட்டார் சைக்கிள் ஓட்டி நெல்ஸின் தீடல் மாட் லாஸிம் (44) என்பவர், நவம்பர் 27 ஆம் நாள். கிலோமீட்டர் 3.8 லீகாஸ், ஹுலு லங்காட் என்ற இடத்தில் காலை 11.35 மணிக்கு மோதப்பட்டார். 

சாலை போக்குவரத்து சட்டம் 1987 (சட்டம் 333/87) இன் பிரிவு 44 (1) (பி) இன் கீழ் இந்த நபர் மீது அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், வெ. 50,000 அபராதமும் 10 ஆண்டுகால சிறையும் விதிக்கப்பட சட்டம் வகை செய்யும். 

வழக்கு விசாரணைக்கு துணை அரசு வக்கீல் முஹமது ஹெய்ருல் இக்ரம் ஹைருடீன் ஆஜரானார், வழக்கறிஞர் டான் டெக் யூ ஹோயை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு  வெ.12,000 ஜாமீனை நீதிமன்றம் அனுமதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here