இதையடுத்து 2018- ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் நடக்கும் என அரச குடும்பத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
கெய் கோமுரோவின் குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாலும், அவரது தாயார் தனது முன்னாள் கணவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததாலும் இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.
இதுகுறித்து அவர் திருமணம் என்பது இரு பாலினத்தின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. எனவே அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் ஒரு பெற்றோராக அது நான் மதிக்க வேண்டிய ஒன்று என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
எனினும் மாகோ-கெய் கொமுரோவின் திருமணம் எப்போது நடைபெறும் என்பது முறையாக அறிவிக்கப்படவில்லை.