பாம்பனுக்கு 530 கிலோ மீட்டர் தொலைவில் “புரெவி” புயல் மையம் கொண்டிருப்பதால் பாம்பனில் 7- ஆம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பனில் தற்போது 30 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.
“புரெவி” புயல் முதலில் இலங்கை கரையை கடக்க உள்ள நிலையில் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்க உள்ளதால், துறைமுகம் வழியே புயல் கடக்கக் கூடும் வகையில் ஏழாம் எண் கூண்டு தற்போது பாம்பனில் ஏற்றப்பட்டுள்ளது.