இஸ்லாமாபாத்:
சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நிலையைக் காரணம் காட்டி கோர்ட்டில் ஜாமீன் பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார். ஆனால், ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் பாக்கிஸ்தான் திரும்பாமல் லண்டனிலேயே தங்கியுள்ளார்.
இதனிடையே அல் அஜிசியா, ஆவென் பீல்டு ஊழல் வழக்குகளில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நவாஸ் ஷெரீப்புக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த ஊழல் வழக்குகள் நீதிபதிகள் அமீர் பாரூக் மோசின் அக்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தனர்.