அமீரக விண்வெளி ஏஜென்சியின் விஞ்ஞானிகள் , பொறியாளர்களால் உருவான ‘பெல்கான் ஐ-2’ என்ற செயற்கைகோள் அமெரிக்காவின் செயற்கைகோள் விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ், பிரான்ஸ் நாட்டின் தலெஸ் அலினியா விண்வெளி நிறுவனம் ஒத்துழைப்பில் தயாரானது. கடந்த ஆண்டில் ராணுவத்தின் முதல் செயற்கைகோளான ‘பெல்கான் ஐ-1’ விண்ணில் ஏவி தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டில் புதிய செயற்கைகோளானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரஞ்சு கயானாவில், ஆரியன்ஸ்பேஸ் ராக்கெட் ஏவுதளத்தில் ரஷியா நாட்டின் ‘சோயுஸ் 2’ என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29-ஆம்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து மீண்டும் நேற்று விண்ணில் ஏவப்படும் என ஆரியன்ஸ்பேஸ் விண்வெளி மையம் தகவல் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் எல்லாம் சரியாக இருந்தது.
விண்ணில் ஏவப்பட்டு சரியாக 58 நிமிடம், 48 வினாடிகளில் ‘பெல்கான் ஐ-2’ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் தனியாக விடுவித்தது.
அமீரக மேம்பட்ட தொழில் நுட்பத்துறையின் துணை மந்திரி சாராஅல் அமிரி தனது டுவிட்டர் பதிவில், “அமீரகத்தின் ராணுவ செயற்கைகோளான ‘பெல்கான் ஐ-2’ விண்ணில் ஏவப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திட்டப்பணியில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.