விளையாடிக்கொண்டிருந்தப்போது அவரை நோக்கி வேகமாக வந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக பந்து அவரது மார்பு பகுதியில் பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக லோகநாதனை மீட்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லோகநாதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உறவினர்களும் அங்கு திரண்டு கதறி அழுதனர்.
இதனிடையே, இளைஞரின் உடலை உடற்கூராய்வு செய்யவில்லை எனக்கூறி திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் எதிரில், லோகநாதனின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மருத்துவர்கள் இல்லாததாலும், உடற்கூராய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
லோகநாதன் திருவள்ளூர் வள்ளுவர் புரம் பகுதிக்ச் சேர்ந்த ராசாத்தி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.