ராசல் கைமா-
பயிற்சி பெற்றவர்கள் முன்னேற்பாடுகளுடன் வருகை புரிகின்றனர். புதிதாக செல்பவர்கள் முன் ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் சென்று வருகின்றனர். இதன் காரணமாக மலைப்பகுதியில் பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். பலர் கீழே சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். மேலும், பலர் வழி தெரியாமல் பள்ளத்தாக்குகளில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அந்த மலைப்பகுதியில் ஆசியா, அரபு நாடுகளைச் சேர்ந்த 9 பேர் சாகச பயணத்திற்காகச் சென்றுள்ளனர். பொதுவாக மலைப்பகுதியில் செல்லும்போது வரைபடம், திசைகாட்டும் கருவி, முதலுதவி பொருட்கள், தண்ணீர், உணவு ஆகியவைகளை தேவையான அளவு எடுத்து செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் முன்னேற்பாடு எதுவும் இல்லாமல் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் மலையில் ஏறிச் சென்று கொண்டு இருக்கும்போது திசை மாறி போய்விட்டனர். வழி தெரியாததால் வெகு தொலைவு சென்று சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக தங்களை மீட்கக்கோரி ராசல் கைமா போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலைப் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்கள் கூறிய அடையாளங்கள், ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கருவி உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவ்வளவு எளிதாக போலீசாரால் 9 பேர் சிக்கியுள்ள இடத்தை நெருங்க முடியவில்லை.
இது குறித்து ராசல் கைமா மத்திய செயல்பாட்டு பிரிவின் பொது இயக்குநர் டாக்டர் முகம்மது அல் ஹுமைதி கூறும்போது, “மலைப்பகுதியில் சாகசகத்தில் ஈடுபடுபவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.