இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை அமெரிக்க தேர்தல் சபையும் தற்போது உறுதி செய்துவிட்டது. எனவே டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது. இது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கருத்து தெரிவிக்கையில் அவர் டிரம்பை பயங்கரவாதி என குறிப்பிட்டார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் பேசுகையில் ‘‘ஜோ பிடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால், டிரம்ப் வெளியேறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.