ஜெனீவா சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், “சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கொடூரமான மோதல் மற்றும் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.









