தற்போது இது டாலர், பவுண்ட் மாதிரி உண்மையான நாணயங்களை போலவே பரவலாக வர்த்தகம் செய்யப்படுகிறது. மிக சமீபத்தில் பன்னாட்டு பண பட்டுவாடா நிறுவனமான பேபால் நிறுவனத்துடன் பணம் செலுத்துவதற்கான ஒரு வடிவமாகவும் இது வளர்ந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 5 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) இருந்தது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இதன் மதிப்பு அதிரடியாக 20 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.15 லட்சம்) உயர்ந்தது. இது பிட்காயின் மதிப்பில் புதிய உச்சம் என கூறப்பட்டது.
ஆனால் நேற்றுக் காலை 8.40 மணி நிலவரப்படி பிட்காயின் மதிப்பு 22 ஆயிரத்து 120 டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரம்) ஆகும். 12 ஆண்டுகளில் பிட்காயின் இதுவரை இல்லாத இந்த புதிய உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.