மஜூரோ-
பசிபிக் தீவு நாடான மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு ஒன்றில் 649 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 80 மில்லியன் டாலர் (சுமார் ரூ.600 கோடி) ஆகும்.
இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது. இந்த போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, பிடிபட்ட கொகேய்ன் போதைப்பொருளை செவ்வாய்க்கிழமைய எரித்து அழித்து விட்டோம். இரண்டு பாக்கெட்டு அளவில் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருளைச் சுமந்து வந்து கரை ஒதுங்கிய படகு, ஐலுக் அட்டோல் என்ற இடத்தில் உள்ளூர்வாசி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர்வாசிகள் அந்தப் படகை நகர்த்த முயற்சித்து அது முடியாமல் போனது. இந்தப் படகு ஒரு வருடத்துக்கு மேலாக நகர்ந்து வந்திருக்கக்கூடும், இது பெரும்பாலும் மத்திய அல்லது தென்அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என மார்ஷல் தீவு அட்டர்னி ஜெனரல் ரிச்சர்டு ஹிக்சன் தெரிவித்தார்.