சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலோ விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமெரிக்கா, தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது. மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சியின் வரிசையில், 2- ஆவது திட்டமான அப்போலோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து 1968- ஆம் ஆண்டு டிசம்பர் 21- ஆம் தேதி புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
இந்த விண்கலம் தான் மனிதர்களை சுமந்து சென்று முதல் முறையாக பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, பூமியின் நிலவு வட்டப்பாதையை அடைந்த விண்கலம் ஆகும். அதன்பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.
இதில் பிராங் போல்மேன், ஜேம்ஸ் லோவல், வில்லியம் ஆண்டர்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பயணித்தனர்.