இதற்கு விவசாயிகளிடம் ஆதரவு பெருக பல்வேறு மார்க்கத்தில் சேவை தொடங்கப்பட்டது. இதுவரை 99 கிஷான் ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வருகிற 28-ஆம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் சங்கோலாவில் இருந்து மேற்கு வங்காளம் ஷலிமார் என்ற இடத்திற்கு ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த ரெயில் இயங்கும். மத்திய அரசு பாதி கட்டணத்தை மானியமாக செலுத்துகிறது.