நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறியுள்ளதால் மக்கள் முன்பு இருந்தது போலவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், உரிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்றும், நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட மத்திய அரசின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுவது அவசியம் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகம் இருந்த காலகட்டத்தைப் போலவே இப்போதும் மக்கள் இருந்தால் விரைவில் கொரோனாவை நாட்டைவிட்டு விரட்டிவிட முடியும்.