தக்கலை:
தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். ரஜினி ரசிகரான இவர் ரஜினியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் வெகு விமரரிசையாகக் கொண்டாடி வந்தார்.
தற்போது ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையடுத்து அவரது டீக்கடையில் ரஜினியின் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தார்.
நேற்று திடீரென ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததைக் கேட்டு நாகராஜன் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தனது கடையில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் பிளக்ஸ் போர்டுகளை கிழித்து எறிந்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.