சாய்ந்தது சுவர் -சரிந்தது உடல்- பிரிந்தது உயிர்

திருச்சி:
சமயபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மருதூர் கவுண்டர் தெருவில் வசித்தவர் கோவிந்தன் (60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 5.30 மணியளவில் திடீரென இவரது வீட்டின் மண் சுவர் இடிந்து கோவிந்தன் மீது விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். 

இதுகுறித்த தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பரிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக திருச்சியில் மழை பெய்து வந்தது. இதனால் மண் சுவர் ஈரப்பதத்தால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here