மொகாதிசு-
இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் சாலை அமைக்கும் பணியில் துருக்கியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனவே அங்கு துருக்கி என்ஜினீயர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை மொகாதிசுவில் துருக்கி என்ஜினீயர்களை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதலை நிகழ்த்தினர். சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்து வெடிக்கச் செய்தார்.
இந்த குண்டுவெடிப்பில் துருக்கி அதிகாரி ஒருவரும் சோமாலியா போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.