இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே, போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு 6 சுற்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. விவசாயிகளுடனான பேச்சு வார்த்தையை மத்திய அரசு இன்று (4- ஆம்தேதி) மீண்டும் தொடர்கிறது.
இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டத்தை சத்தியாகிரக போராட்டத்துடன் ஒப்பிட்டு டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.
நாடு சம்பரன் (சத்தியாக்கிரகம்) போன்ற சோகத்தை எதிர்கொள்ளப்போகிறது. ஆங்கிலேய அரசு அப்போது பண்ணையார்களின் ஆதரவாளர்களாக இருந்தது. இப்போது மோடியின் நண்பர்கள், அந்த பண்ணையார்களாக உள்ளனர்.
ஆனால் ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்தியாகிரக போராளிதான். அவர்கள் தங்கள் உரிமைகளை திரும்பப்பெறுவார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
சத்தியாக்கிரக போராட்டம் என்பது இந்திய விடுதலை போராட்டத்தின் ஓர் அங்கமாக 1917- இல் மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்டதாகும்.