நாமக்கல்-
கேரளா, ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதால், நாமக்கல் மண்டலத்தில், கடந்த 4 நாளில் முட்டை விலை 50 காசுகள் வரை குறைந்து 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு தினமும் 70 லட்சம் முட்டைகள் லாரிகளில் அனுப்பப்படும். பறவை காய்ச்சல் பீதியால், கேரளாவில் முட்டை விற்பனை சற்று குறைந்துள்ளது.
இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கேரளாவுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்குள்ள பண்ணைகளில் சுமார் 1 கோடி அளவுக்கு முட்டைகள் தேக்கம் அடைய தொடங்கியுள்ளது.