பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரத்தில் நேற்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இந்த நிலையில், 2 ஆவது நாளாக பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில், 783 காளைகளும், 649 காளையர்களும் களமிறங்க உள்ளனர்.
ஒவ்வொரு குழுவாக களமிறக்கப்படும் காளையர்களில் சிறந்த வீரருக்கும், அதேபோல, சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பார்வையாளர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டையொட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.