கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.இன்று காலை, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர், விளையாட்டு ஆரம்பமானது.
இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 430 மாடுபிடி வீரர்கள், 830 காளைகள் களத்தில் இருக்கின்றன. உடலில் காயங்கள் எதுவும் இல்லாத, நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் காளைகள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதேபோல, மாடுபிடி வீரர்களுக்கும் முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தான் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, குறைந்த அளவிலான மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே ஒரு சமயத்தில் களத்தில் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏராளமானோர் கூடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இன்று அவனியாபுரத்துக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிடுவார்.