மாலை 6.25 மணிக்கு 18- ஆம்படி வழியாக சோபானத்திற்கு வந்ததை தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலையில் ஆபரணங்கள் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது.
தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி காட்சி தந்தது. அப்போது சபரிமலையையே அதிர வைக்கும் சரண கோஷம் எழுப்பினர் பக்தர்கள்.
கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஜோதி தெரியும் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.