வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இதுகுறித்து ஈரான் தரப்பிலும், அமெரிக்கா தரப்பிலும் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.