அழகர்கோவில்:
கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாகவும் அரசின் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், இந்த தீர்த்தத்தில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனால் தானாக வழிந்துவரும் தீர்த்தம் சுமார் 4 கி.மீ. தூரம் பல்வேறு மூலிகை மரங்களைக் கடந்தும், அத்துடன் ஆங்காங்கே மலையின் தன் ஊற்று தண்ணீரும் சேர்ந்து அழகர்மலை அடிவாரத்திற்கு சிற்றாறாக வருகிறது. இது சப்த கன்னிமார் கோவில் முன்பு அதன் வழியாக வழிந்து செல்கிறது.
இந்த தீர்த்தம் மொத்தமாக அருகில் உள்ள ஆறாமுத்தன் கண்மாயில் போய் சேருகிறது. சமீபத்தில் பெய்த புயல் மழையின் காரணத்தினால் நூபுர கங்கை தீர்த்தம் அதிக அளவு வெளியேறி வந்து யாரும் நீராடாமல் போய் கொண்டிருக்கிறது.
கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் இதை ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு பிறகு இந்த தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.