மலாக்கா: தாமான் க்ருபோங் ஜெயாவில் ஏழு வயது சிறுவன் வெள்ளிக்கிழமை (ஜன. 29) தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
மாலை 4 மணியளவில் இந்த சம்பவத்தில் குழந்தை தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீரில் மூழ்கியதாக கூறப்படுவதாக மலாக்கா குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைவர் உதவி ஆணையர் முகமட் சுக்ரி கமன் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் உடல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், 32 மற்றும் 38 வயதுடைய இரு பெற்றோர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று மாலை 4 மணியளவில், எங்கள் மலாக்கா தெங்கா மாவட்ட செயல்பாட்டு அறைக்கு ஒரு நபர் தனது மகன் தாமான் க்ருபோங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் நீரில் மூழ்கிவிட்டதாக ஒரு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திலுள்ள சோதனைகளில் ஏழு வயது ஆண் பாதிக்கப்பட்டவரின் உடலின் பல பாகங்களில் காயங்களுடன் காணப்பட்டார் என்று சனிக்கிழமை (ஜனவரி 30) இங்கு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.- பெர்னாமா