கவுகாத்தி:
அசாமில் மிசோரம் எல்லையை ஒட்டியுள்ள கைலகத்தி மாவட்டம் ராம்நாத்பூரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கூடத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 2 குண்டு வெடிப்பு சமபவங்கள் நிகழந்தன. இதில் குடிநீர் தொட்டியும், கழிவறை கட்டடமும் இடிந்து தரைமட்டமாகின.
கோப்பு படம்
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்ட் பபிந்திரகுமார் நாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் வெடிகுண்டு நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.