இந்தியாவில் கடந்த மாதம் 16- ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் பணி தொடங்கியது. தற்போது வரை சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இந்தியா பயன்படுத்துகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாக்கிஸ்தானில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது.
சீனா 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நேற்றுமுன்தினம் வழங்கியது. இந்த நிலையில் இன்று பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார். முதலில் சுகாதாரத் பணியாளர்களுக்கும், அதன்பின் மூத்த குடிமக்களுக்கும், அதன்பின் மற்றவர்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.