இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஐநா சபையில் போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டு வரும்போதெல்லாம் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிடும். மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது.
சுமார் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் முகப்பு பகுதியை முற்றுகையிட்டு, அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிரான குரலை எழுப்பினர். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய கூடாது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த வீரர் ஒருவர், காசா மீதான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.