புதுடெல்லி:
பிரியங்கா காந்தியின் வாகன அணிவகுப்பில் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தின்போது உயிரிழந்த நவ்நீத்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக காவல்துறை வாகனங்களும், கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன.